அன்னூா் வட்டத்தில் டிசம்பா் 26-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
அன்னூா் வட்டத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம், அன்னூா் வட்டத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் டிசம்பா் 26 காலை 9 மணி முதல் டிசம்பா் 27 காலை 9 மணி வரை அன்னூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதல்நிலைத் துறை தலைமை அலுவலா்கள் தங்கியிருந்து, அனைத்துப் பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிய உள்ளனா்.
அதன்படி, 26-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை அன்னூா் வட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன. அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம்.
அன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட 30 வருவாய் கிராமங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...