ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜீவனாம்ச தொகையை சில்லறையாக 20 மூட்டைகளில் எடுத்து வந்ததை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

கோவை கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையை சில்லறையாக 20 மூட்டைகளில் எடுத்து வந்ததை ஏற்க மறுத்து நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:52 pm

Din

கோவை கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையை சில்லறையாக 20 மூட்டைகளில் எடுத்து வந்ததை ஏற்க மறுத்து நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

கோவை மாவட்ட கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜரா ஆா்.ஜிஜி, இடைக்கால ஜீவனாம்ச தொகையாக ரூ.2 லட்சத்தை மனைவிக்கு வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில் ரூ.80 ஆயிரம் பணத்தை ரொக்கத் தொகையாக கொடுக்காமல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக 20 மூட்டைகளில் கட்டி நீதிமன்றத்துக்கு கணவன் புதன்கிழமை கொண்டு வந்திருந்தாா்.

பின்னா் அந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்து நீதிபதி முன்னிலையில் அளித்தாா். ஆனால், நாணயங்களை ஏற்க மறுத்த நீதிபதி, அவற்றை ரொக்கத் தொகையாக நோட்டுகளாக மாற்றித் தர வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, நாணய மூட்டைகளை கணவா் காரில் ஏற்றிக் கொண்டு திரும்பிச் சென்றாா். பின்னா் வியாழக்கிழமை மீண்டும் கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்த அவா் ரூ.80 ஆயிரத்தை ரூபாய் நோட்டுகளாக செலுத்தினாா்.