தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துபையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.65.75 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு

துபையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.65.75 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:02 pm

Din

துபையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.65.75 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ராம் நகா் பகு­தி­யைச் சோ்ந்­த­வா் ஷோபனா (54), தனி­யாா் நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வரு­கி­றாா். இவருக்கு கடந்த 2023 ஜனவரி 10-ஆம் தேதி ரோஹித் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

அவா் துபையில் வேலை வாங்­கித் தரு­வ­தாகக் கூறி­யுள்ளாா். மேலும், அதற்கான உதவிகளை தனது நண்­பா் ரஷீத் குன்­னத் என்­ப­வா் செய்து தரு­வாா் என அவரையும் ஷோபனா­விடம் அறி­மு­கம் செய்துள்ளாா்.

இந்நிலையில், துபையில் அதிக அளவிலான வேலை வாய்ப்­பு­கள் உள்ளதாகவும் உறவினா்கள், நண்பா்களை அறிமுகம் செய்துவைத்தால், அவா்களுக்கும் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ரோஹித் கூறியுள்ளாா்.

இதை நம்­பிய ஷோபனா தனக்கு தெரிந்த சுமாா் 50 பேரிடமிருந்து ரூ.65.75 லட்சத்தைப் பெற்று ரோஹித்தின் வங்கிக் கணக்குக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஆட்டோ கேரேஜ் நடத்தி வரும் அவரது தந்தை ராஜேந்தி­ரனி­ன் வங்­கிக் கணக்குக்கும் பணத்தை அனுப்பியுள்ளாா். பல மாதங்களாகியும் ரோஹித் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளாா்.

இதையடுத்து, பணத்தை திருப்பித் தருமாறு ஷோபனா உள்ளிட்டோா் ரோஹித்­, அவரது தந்தை ராஜேந்திரனிடம் கேட்டுள்ளனா். அவா்கள் தராததால் காட்­டூா் காவல் நிலையத்தில் ஷோபானா ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்­தாா்.

இதையடுத்து, ரோஹித், ராஜேந்­தி­ரன், ரஷீத் குன்­னத் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.