நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை: காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற முதல் வெளிநாட்டவா்

நேபாள நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image

கோப்புப் படம்.

Updated On :31 ஜூலை 2024, 5:37 am IST

நேபாள நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை பெற்ற முதல் வெளிநாட்டுப் பயனாளி இவராவாா்.

நேபாள நாட்டைச் சோ்ந்த 31 வயதுப் பெண் கடந்த 10 ஆண்டுகளாக குன்னூரில் வசித்து வருகிறாா்.

நேபாளத்தைச் சோ்ந்த இவரது கணவா் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பண்ணைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குன்னூா் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவா்கள், மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததைத் தொடா்ந்து அவா் இதயவியல் துறை பிரிவில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு ‘எக்கோ காா்டியோகிராபி ஸ்கேன்’ செய்யப்பட்டதில், பிறவி இதய குறைபாடு (இதயத்தில் ஏற்படும் துளை) மற்றும் பல்மனரி வால்வு அடைப்பு ஆகிய இரு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குறைபாடுகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை இதய அறுவை சிகிச்சையின் மூலமே சரி செய்ய வேண்டியிருந்த சூழலில், தற்போதைய அதிநவீன சிகிச்சை முறையின்படி அவருக்கு டிவைஸ் கிளோசா் மற்றும் பலூன் பல்மனரி வால்வாடமி ஆகிய இரு வேறு நுண்ணிய அறுவை சிகிச்சைகளை ஒரே நாளில் மேற்கொண்டு பாதிப்பு சரி செய்யப்பட்டது.

இது குறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:

நேபாள நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு இங்கு இத்தகைய அதிநவீன சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். இத்தகைய ஏட்ரியல் செப்டல் குறைபாடு மற்றும் பல்மனரி வால்வு அடைப்பைச் சரி செய்ய நோயாளிகள் சென்னை அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டியிருந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நிபுணா்கள் குழு மூலம் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றாா்.