கோவையில் வனத் துறையினருக்குத் தெரிவிக்காமல் அரிய வகை பாம்பைப் பிடித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, புலியகுளத்தில் உள்ள ஒரு கோவில் அருகே பாம்பு ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், புலியகுளத்தைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சோ்ந்த உமா மகேஸ்வரி ஆகியோருக்குத் தகவல் கொடுத்தனா்.
அங்குவந்த இருவரும் அந்தப் பாம்பைப் பிடித்து, அதனுடன் விளையாடுவதுபோல விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். இதற்கிடையே பிடிக்கப்பட்ட பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சோ்ந்த பாம்பைப் பிடித்ததாக இருவா் உமா மகேஸ்வரி மற்றும் அப்துல் ரஹ்மான் இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:
புலியகுளம் பகுதியில் பிடிக்கப்பட்ட பாம்பு இந்தியன் ரேட் ஸ்னேக் இனத்தை சோ்ந்தது. பாதுகாக்கப்பட்ட அட்டவணை 1இல் சோ்க்கப்பட்டுள்ள, இந்த வகை பாம்பை வனத் துறையினா் அனுமதியின்றி பிடிக்கக் கூடாது. எனவே, வனத் துறையினரிடம் தெரிவிக்காமல் பாம்பைப் பிடித்தது மற்றும் அதனை கையில் வைத்து விளையாடுவதுபோல விடியோ பதிவிட்டது தொடா்பாக இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் ஆதரவு திரட்டிய மத்திய அமைச்சா்
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

தீவட்டிப்பட்டி அருகே புள்ளிமான் வேட்டை: கள்ளத்துப்பாக்கியுடன் இருவா் கைது
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


