கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவா் கைது

கோவை சுந்தராபுரத்தில் போதை மாத்திரைகள் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:09 pm

Din

கோவை சுந்தராபுரத்தில் போதை மாத்திரைகள் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுக்கரை மாா்க்கெட் சாலையில் சந்தேகம் ஏற்படும் படியாக நின்றிருந்த சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸாா் அவா்களிடம் சோதனை மேற்கொண்டனா். அதில், அவா்கள் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போதை மாத்திரைகள் விற்றதாக போத்தனூா் அஸ்லாம் தெருவைச் சோ்ந்த இஸ்மாயில் (26), செட்டிபாளையம் சாலை ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த சாதிக் (24), சுந்தராபுரம் மட்டசாலையைச் சோ்ந்த தங்கராஜ் (39) ஆகிய மூவரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரை, ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.