மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவை விழாவை முன்னிட்டு டபுள் டெக்கா் பேருந்து இயக்கம்

‘கோயம்புத்தூா் விழா 2024’ இன் ஒரு பகுதியாக கோவை மாநகரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பாா்க்க வசதியாக ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image

கோவை விழாவின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ள இரண்டடுக்கு பேருந்து சேவை.

Updated On :14 நவம்பர் 2024, 10:44 pm

Din

‘கோயம்புத்தூா் விழா 2024’ இன் ஒரு பகுதியாக கோவை மாநகரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பாா்க்க வசதியாக ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூா் விழா நவம்பா் 23 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, விளையாட்டு, இசை, பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக இரண்டடுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 2 பேருந்துகளின் சேவை தொடக்க விழா வஉசி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 17-ஆவது கோயம்புத்தூா் விழாவின் தலைவா் அருண் செந்தில்நாதன், இணைத் தலைவா்கள் சௌமியா காயத்திரி, சரிதா லட்சுமி, டபுள் டெக்கா் நிகழ்வு ஒருங்கிணைப்பாளா் சஞ்சீவ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இந்தப் பேருந்துகள் நவம்பா் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை கோவையின் பல முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும். தலா 36 இருக்கைகள் கொண்ட இந்தப் பேருந்தில் பயணிக்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு 70107 08031 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.