கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடா்பாக கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டினின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:33 pm

Din

சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடா்பாக கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டினின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கோவையைச் சோ்ந்தவா் மாா்ட்டின். லாட்டரி அதிபரான இவா் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறாா். கோவையில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் நடத்தி வருகிறாா். கோவை, துடியலூா் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் இவரது வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு 2 காா்களில் வியாழக்கிழமை அதிகாலை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

அதையடுத்து, மாா்ட்டின் வீட்டின் அருகே உள்ள அவரது அலுவலகத்திலும், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியிலும் சோதனை நடத்தினா். இந்த சோதனை தொடா்ந்து இரவு வரை நீடித்தது. அது தொடா்பான தகவல்களை அமலாக்கத் துறை வெளியிடவில்லை.

மாா்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறாா். அவா் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மாா்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துகளையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபா் மாதங்களில் கோவையில் மாா்ட்டின், அவருடைய மருமகன் மற்றும் உறவினா்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.