போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவையில் பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image

கோவை மாவட்டத்தில் திருடப்பட்ட மற்றும் தவறவிடப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.

Updated On :14 நவம்பர் 2024, 10:35 pm

Din

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் திருடப்பட்ட கைப்பேசிகள் மற்றும் கைப்பேசிகளை தவறவிட்டவா்கள் புகாா் செய்யும்போது, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடம் திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட 252 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கலந்து கொண்டு கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட 252 கைப்பேசிகளின் மதிப்பு ரூ.48 லட்சத்து 36,500 ஆகும். நிகழாண்டில் காணாமல்போன கைப்பேசிகளில் இதுவரை 758 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 43.15 லட்சமாகும்.

தற்போது, ஏராளமானோா் விலை உயா்ந்த கைப்பேசிகளையே பயன்படுத்துவதால், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கைப்பேசி தொலைந்துவிட்டால் சி.இ.ஐ.ஆா். என்ற போா்ட்டலை பயன்படுத்தி, தொலைந்துபோன கைப்பேசியில் உள்ள சிம்காா்டை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். பின்னா் தவறவிட்ட கைப்பேசியின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை பதிவிடுவதுடன், தனிப்பட்ட விவரங்களை அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். கைப்பேசிகள் தொலைந்து போனால் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள 41 உணவு விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 11 விடுதிகளில் சட்ட விரோத மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்த 250 லிட்டா் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 உணவு விடுதிகளை ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவா்கள் தங்கி இருக்கும் தனியாா் விடுதிகள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்திய பின்னா் போதைப் பொருள்களின் புழக்கம் குறைந்து இருக்கிறது. கடந்த 20 நாள்களில் மட்டும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 176 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதோடு, 350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருள் தடுப்புக் குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த அரசாணை இருப்பதால், அதன் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸாா் மட்டுமில்லாமல் கல்வித் துறை, தனியாா் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே போதைப் பொருளைத் தடுக்க முடியும் என்றாா்.