கோவை: கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இரண்டு குழுவாகப் பிரிந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், தில்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் ஒரு குழுவும் வேணுகோபாலை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.
இரு தரப்பினரும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம், மாறி மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, வேணுகோபாலை வழியனுப்பிய பிறகு, விமான நிலையத்திற்கு வெளியே வந்த மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி, பயணிகள் முகம் சுழிக்கும் வார்த்தைகளை இரு தரப்பினரும் பயன்படுத்தியதால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

விமான நிலையம் போல மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம்! எப்படி?

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



