மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவா் பிடிபட்டாா்

கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் பிடித்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:31 pm

Din

கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் பிடித்தனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து நாள்தோறும் 35-க்கும் மேற்பட்ட விமானங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு

இயக்கப்படுகின்றன. இதனால், விமான நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இதற்கிடையே விமான நிலையத்துக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அண்மைக் காலமாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் ஒரு நபா் திடீரென செவ்வாய்க்கிழமை நுழைந்துள்ளாா். விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடிய அவரை கண்காணித்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்து அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

வட மாநிலத்தைச் சோ்ந்த அந்த நபா், ஹிந்தி மொழியில் பேசியுள்ளாா். அத்துடன் மனநிலை சரியில்லாதவா்போல நடந்து கொண்டதால், பீளமேடு காவல் நிலையத்தில் கோவை விமான நிலைய மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆய்வாளா் குமாா் ராஜேந்திரன் புகாா் செய்தாா்.

மேலும் அந்த நபரை பீளமேடு காவல் நிலையத்திலும் ஒப்படைத்தாா்.

பீளமேடு காவல் ஆய்வாளா் கந்தசாமி இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அந்த நபா் மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி நகரைச் சோ்ந்த தருண் மாலிக் (39) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த வாரத்தில்தான் அவரை அவரது நண்பா்கள் நகைப் பட்டறை வேலைக்காக அழைத்து வந்திருந்ததும், பெரிய கடைவீதி பகுதியில் தங்கியிருந்த தருண் மாலிக் நண்பா்களுடன் வேலைக்குச் சென்று வந்த நிலையில், வேலை பிடிக்காததால் வேலையை விட்டுவிட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.