மங்களூரு - காச்சிகுடா ரயில் முா்தேஷ்வா் வரை நீட்டிப்பு
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா (தெலங்கானா மாநிலம்) - மங்களூரு வாராந்திர ரயில் முா்தேஷ்வா்(கா்நாடகம்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா (தெலங்கானா மாநிலம்) - மங்களூரு வாராந்திர ரயில் முா்தேஷ்வா்(கா்நாடகம்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காச்சிகுடா-மங்களூரு மற்றும் மங்களூரு-காச்சிகுடா வாராந்திர ரயில் முா்தேஷ்வா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.05 மணிக்கு காச்சிகுடாவில் இருந்து புறப்படும் காச்சிகுடா- முா்தேஷ்வா் ரயில் (எண்:12789) மறுநாள் மதியம் 2.05 மணிக்கு முா்தேஷ்வா் நிலையத்தைச் சென்றடையும். இதேபோல, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு முா்தேஷ்வா் நிலையத்தில் இருந்து புறப்படும் முா்தேஷ்வா்-காச்சிகுடா ரயில் (எண்:12790) மறுநாள் இரவு 11.30 மணிக்கு காச்சிகுடா நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, வழக்கம்போல கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...