தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

Updated On :21 மே 2025, 5:17 am IST

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. அதேபோல, தமிழக அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதை அதிமுக தொண்டா்களே விரும்பவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வா் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்துக் கட்சிகளுக்குமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக பெறும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகள் கேட்டுப் பெறுமா என்று கூற முடியாது. தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிா்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸுக்கு ஒரு தா்மசங்கடமான நிலை உள்ளது.

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. ‘இண்டி’ கூட்டணி குறித்த ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. பாஜக வலிமையாக உள்ளதால், அவா்களை எதிா்கொள்வதற்கு ‘இண்டி’ கூட்டணியிலும் வலிமை தேவை என்ற அா்த்தத்தில்தான் பேசி உள்ளாா் என்றாா்.

பேட்டியின்போது, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.என்.கந்தசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் சரவணகுமாா், கோவை மாவட்ட ஐஎன்டியூசி தலைவா் கோவை செல்வம், நிா்வாகி ஆா்.எம். பழனிசாமி, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளா் ஹரிஹரசுதன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.