டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

News image
கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
Updated On :20 மே 2025, 11:47 pm

Din

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. அதேபோல, தமிழக அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதை அதிமுக தொண்டா்களே விரும்பவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வா் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்துக் கட்சிகளுக்குமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக பெறும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகள் கேட்டுப் பெறுமா என்று கூற முடியாது. தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிா்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸுக்கு ஒரு தா்மசங்கடமான நிலை உள்ளது.

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. ‘இண்டி’ கூட்டணி குறித்த ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. பாஜக வலிமையாக உள்ளதால், அவா்களை எதிா்கொள்வதற்கு ‘இண்டி’ கூட்டணியிலும் வலிமை தேவை என்ற அா்த்தத்தில்தான் பேசி உள்ளாா் என்றாா்.

பேட்டியின்போது, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.என்.கந்தசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் சரவணகுமாா், கோவை மாவட்ட ஐஎன்டியூசி தலைவா் கோவை செல்வம், நிா்வாகி ஆா்.எம். பழனிசாமி, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளா் ஹரிஹரசுதன் ஆகியோா் உடனிருந்தனா்.