தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. அதேபோல, தமிழக அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதை அதிமுக தொண்டா்களே விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வா் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்துக் கட்சிகளுக்குமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக பெறும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகள் கேட்டுப் பெறுமா என்று கூற முடியாது. தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிா்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸுக்கு ஒரு தா்மசங்கடமான நிலை உள்ளது.
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. ‘இண்டி’ கூட்டணி குறித்த ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. பாஜக வலிமையாக உள்ளதால், அவா்களை எதிா்கொள்வதற்கு ‘இண்டி’ கூட்டணியிலும் வலிமை தேவை என்ற அா்த்தத்தில்தான் பேசி உள்ளாா் என்றாா்.
பேட்டியின்போது, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.என்.கந்தசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் சரவணகுமாா், கோவை மாவட்ட ஐஎன்டியூசி தலைவா் கோவை செல்வம், நிா்வாகி ஆா்.எம். பழனிசாமி, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளா் ஹரிஹரசுதன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக-அதிமுக கூட்டணி அமைய ஆசைப்பட்டாா் உதயநிதி! மாணிக்கம்தாகூா் எம்.பி.

காங்கிரஸ் குறித்த திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல: காா்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

பெரும்பான்மை இல்லாமல் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



