அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

ஐந்தாவது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து தீவிர சோதனை..

News image
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை
Updated On :16 அக்டோபர் 2025, 6:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அடிக்கடி மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடந்த மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகள் என 4 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினார்கள். இதில், சந்தேகப்படும் படியாக எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை கோவை மாவட்ட அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தபோது மீண்டும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் இது குறித்து அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாயுடன் அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள். அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்களிலும் ஒவ்வொரு அறையாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் 4 முறையும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் இன்று ஐந்தாவது முறையாக மீண்டும் மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீஸார், சைபர் கிரைம் காவல் துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

There was a huge commotion after a bomb threat was sent to the Coimbatore District Collector's Office via email.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.