/

ஐ.டி. ஊழியா் தற்கொலை

உடையாம்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:16 am IST

உடையாம்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ்மூா்த்தி மகன் கோகுல்பிரசாந்த் (30). ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவரது தாய் உமாபரமேஸ்வரி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம்.

நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, கோகுல்பிரசாந்த் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.