சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கோவை: கதிர் நாயக்கன் பாளையத்தில் ரேஷன் கடையை சூறையாடிய ஒற்றை யானை!

கோவை: கதிர் நாயக்கன் பாளையத்தில் ரேஷன் கடையை சூறையாடிய ஒற்றை யானையால் அந்தப் பகுதி மக்கள் அச்சம்..

News image

சேதமடைந்த ரேஷன் கடையும், ஊருக்குள் வலம் வரும் ஒற்றை யானையும்... - படம்: தினமணி.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:43 pm IST

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கதிர் நாயக்கன் பாளையம் பகுதியில் ரேஷன் கடையை சூறையாடிய ஒற்றை யானையால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் தினமும் ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ல தோட்ட பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி ஒற்றை யானை அச்சுறுத்தி வந்தது.

தற்போது வீடுகளின் கேட்டை உடைத்து உணவுகளை தேடி வந்த அந்த ஒற்றை யானை, இன்று (ஆக. 12) அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து ஊருக்குள் வந்து கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மூட்டைகளையும் தூக்கிச் சென்றது.

இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் உள்ள மக்களின் இடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். சூறையாடப்பட்ட ரேஷன் கடையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டங்களை சேதப்படுத்திய அந்த ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Summary

Residents of the Kathir Nayakkan Palayam area, which falls under the Kurudampalayam Panchayat in Coimbatore, are gripped by fear after a lone elephant ransacked a ration shop.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.