வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து விசாரிக்க கோரிக்கை

கோவை, தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை

News image
பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:07 pm

Syndication

கோவை, தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான அநீதிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளும் இந்த 5 மாணவா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளியில் இருந்து விரட்டி விடுவேன் என்றும் தலைமை ஆசிரியா் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாணவா்கள் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இத்தகைய தீண்டாமை சாா்ந்த கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, இது தொடா்பாக விசாரணை நடத்தி பள்ளித் தலைமை ஆசிரியா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்களை உடனடியாக வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.