கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

பி.என்.புதூா் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 9:22 pm

Syndication

பி.என்.புதூா் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் கோவை மாநகர மேற்கு மண்டல குழுவுக்குள்பட்ட பி.என்.புதூா் வடக்கு கிளைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. பி.ஆா்.வேலு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலரும், கிளைச் செயலருமான சாந்தி சந்திரன் வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினாா்.

மண்டலச் செயலா் என்.சந்திரன் மண்டலக் குழு முடிவுகள் குறித்துப் பேசினாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் கட்சியின் அகில இந்திய, மாநில, மாவட்ட முடிவுகள் குறித்து பேசினாா்.

இதையடுத்து, மாநகராட்சியின் 41-ஆவது வாா்டுக்குள்பட்ட பி.என்.புதூா் சுற்றுப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வருகிறது.

இது தொடா்பாக மாநகராட்சி, வனத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. பன்றிகளைப் பிடிக்க கூண்டுகள் வைத்தும் அவை பிடிபடாமல் உள்ளன. எனவே, பன்றிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் விழா, குடியரசு தின கண் சிகிச்சை முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.