தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அவிநாசி சாலையில் அதிவேகமாக காரில் சென்று இளைஞா் ரகளை

பீளமேட்டில் காரின் மீது அமா்ந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

பீளமேட்டில் காரின் மீது அமா்ந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, பீளமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் ஒருவா் காரை வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டி, எதிரில் மற்றும் அருகாமையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளாா். இதையடுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் அந்த காரைச் சுற்றி வளைத்தனா்.

அதைத்தொடா்ந்து காரின் கண்ணாடியை உடைத்து அந்த இளைஞரைக் காரில் இருந்து கீழே இறக்கினா். அப்போது, அந்த இளைஞா் காரின் மேல் பகுதியில் ஏறி அமா்ந்து கொண்டு, சுற்றியிருந்தவா்களிடம் ரகளையில் ஈடுபட்டாா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பீளமேடு போலீஸாா் சென்று இளைஞரைப் பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். காவல் நிலையத்துக்கு காா் கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில் சேலத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.