கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவை, பீளமேடு புதூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.

News image
பீளமேடுபுதூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியா்கள்.
Updated On :7 ஜனவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, பீளமேடு புதூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 52-ஆவது வாா்டுக்குள்பட்ட பீளமேடுபுதுாா் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை கடந்த 2005-ம் ஆண்டு குடியிருப்புகளாக சிலா் மாற்றி கிரையம் செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவுப்படி, கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலா் மகேந்திரன் தலைமையிலான மாநகராட்சி ஊழியா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி இடத்தை புதன்கிழமை மீட்டனா்.

அப்போது, அங்கிருந்த 2 கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதா்ச்செடிகள் அகற்றப்பட்டன. 20 ஆண்டுகளுக்குப் பின் மாநகராட்சி இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.12 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள 6 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.