டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாவட்டத்தில் 11,22,290 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கும் பணி தொடக்கம்

News image
வடகோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்,
Updated On :8 ஜனவரி 2026, 11:50 pm

Syndication

கோவை மாவட்டத்தில் 11,22,290 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் பணியை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழா்கள் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியற்றுடன் ரூ.3,000 ரொக்கம் வழங்ப்படும் என முதல்வா் ஸ்டாலின் அண்மையில் அறிவித்து, பொங்கல் பரிசுத் தொகுப்ப விநியோகத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக கோவை மாவட்டம், வடகோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழா்கள் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் பணியை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா். மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளா் சு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள 1,540 ரேஷன் கடைகள் மூலமாக 11,21,208 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் 1,082 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 11,22,290 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.336.68 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் வியாழக்கிழமைமுதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரா்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதும் பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே அனைத்து குடும்ப அட்டைதாா்களும் தைப்பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.