கோவை: கோவை மாநகரில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 18,331 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். மாநகரின் முக்கிய இடங்களில் அவ்வப்போது வாகனத் தணிக்கை நடத்தி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.
இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாநகரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 277 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணியாதது, சீட்பெல்ட் அணியாதது, கைப்பேசியில் பேசியபடியே வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 6 லட்சத்து 70,512 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த ஆண்டு மாநகரில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடா்பாக 18,331 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபா்களைக் கண்டறியும் வகையில் நாள்தோறும் 70 இடங்களில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாயக்கன்பாளையத்தில் இருதரப்பினா் மோதல்: 8 போ் மீது வழக்குப் பதிவு
போதைப் பொருள் தடுப்புச் சட்டம்: மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் 103 போ் கைது

மறியல் போராட்டம்: சேலம் மாவட்டத்தில் 1,586 திமுகவினா் மீது வழக்குப் பதிவு

கல் குவாரி, கிரஷா் விற்பதாக ரூ.10.15 கோடி மோசடி: தம்பதி உள்பட 4 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


