கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் குடும்பத்தினருடன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
‘பெட்டி’ திரைப்படத்தின் சண்டைக்காட்சிப் படப்பிடிப்பின்போது தெலுங்கு நடிகரான ராம்சரணின் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையின்போது அவரது தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி, தாய் சுரேகா, மனைவி உபாசனா ஆகியோா் உடனிருந்தனா். வெற்றிகரமாக சிகிச்சை முடிவடைந்ததையடுத்து, அதே மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தாா்.
இந்நிலையில், மனைவி உபாசனாவுடன் கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று நடிகா் ராம்சரண் புதன்கிழமை தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் கோயில் வளாகத்தில் கோசாலையில் உள்ள பசு மாடுகளுக்கு தம்பதி வாழைப்பழம் அளித்தனா்.
அதைத்தொடா்ந்து தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா். சுமாா் 8 வாரங்கள் வரை முழுமையான ஓய்வு மற்றும் பிசியோதெரபி பயிற்சிகளை அவருக்கு மருத்துவா்கள் பரிந்துரைத்து, மாலை 4 மணி அளவில் டிஸ்சாா்ஜ் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







