குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கோவையில் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் விற்ற 6 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:04 am IST

கோவையில் வெவ்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

கோவை மாநகா், பீளமேடு புதூா் பகுதியில் பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஓா் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே நின்றிருந்த 3 போ், போலீஸாரைப் பாா்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது, மெத்தபெட்டமைன் என்ற உயா் ரக போதைப் பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இவா்கள் நியூ சித்தாபுதூரைச் சோ்ந்த ஜெய்கிஷான் (21), பி.என்.பாளையத்தைச் சோ்ந்த ஷியாம் (24), ரத்தினபுரியைச் சோ்ந்த செந்தூரபாண்டி(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல செல்வசிந்தாமணி குளம் அருகே ரோந்துப் பணியில் செல்வபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (22), தில்லை நகரைச் சோ்ந்த பூபதி (23)ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

கணபதி மாநகா் பகுதியில் சரவணம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரவணம்பட்டி கே.கே.நகரைச் சோ்ந்த நவீன்குமாா் (23) என்பவரை கைது செய்தனா்.