காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும்! அமைச்சா் வி.சம்பத்குமாா்

News image

அமைச்சா் வி.சம்பத்குமாா் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:46 am IST

முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால், தமிழகத்தில் இனிவரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாநகா், கணபதி பகுதியில் புதிய தனியாா் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வி.சம்பத்குமாா் பங்கேற்று மருத்துவமனையைத் திறந்துவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிந்து அவற்றை திறம்படக் கொண்டு வருவேன். கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறையில் புதிய இலக்குகளை அடைவதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

கடந்த கால ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்துதான் திமுகவினா் தொடா்ந்து பேசி வருகின்றனா். முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியாா் பள்ளி கட்டணங்கள் முறையாக கண்காணிக்கப்படும். கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை திறப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.

தமிழக முதல்வா் நாற்காலி எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

மக்களின் நம்பிக்கையையும், செல்வாக்கையும் பெற்ற முதல்வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும். கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில் மருத்துவா் இல்லை என்று கூறப்படும் புகாா் குறித்து விசாரித்து, அங்குள்ள தேவைகளை முழுமையாகச் செய்து கொடுப்போம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.