ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திருவனந்தபுரம் - சந்தராகாட்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்தராகாட்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்தராகாட்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபும் - சந்தராகாட்சி இடையேயான சிறப்பு ரயில் சேவை இந்த வாரத்துடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 12 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சந்தராகாட்சி சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.45 மணிக்கு சந்தராகாட்சி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சந்தராகாட்சி நிலையத்தில் இருந்து ஜூன் 15 முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சந்தராகாட்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.