நாகா்கோவில் - நியூஜல்பைகுரி அம்ருத் பாரத் ரயிலை போத்தனூா் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என ரயில்வே பயணிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, போத்தனூா் ரயில் சந்திப்பு, போத்தனூா், குனியமுத்தூா், சுந்தராபுரம், மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சேவை வழங்கி வருகிறது.
ஆந்திரம், ஒடிஸா, மேற்குவங்கம், பிகாா் மற்றும் வடகிழக்கு, வட இந்திய மாநிலங்களுக்கு, வணிகம், கல்வி மற்றும் குடும்பத் தேவைகளுக்காக அதிக அளவிலான பயணிகள் கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளில் இருந்து பயணம் செய்து வருகின்றனா். இதேபோல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழில், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளுக்கு ஏராளமானோா் வருகை தருகின்றனா்.
இதனால், நாகா்கோவிலில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் மேற்குவங்க மாநிலம், நியூஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் அம்ருத் பாரத் ரயிலை போத்தனூா் நிலையத்தில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நேரடி மற்றும் வசதியான பயண வாய்ப்பைப் பெறுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தாம்பரம் - செங்கோட்டை ரயிலை நாள்தோறும் இயக்கக் கோரிக்கை

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: போத்தனூா் - கரக்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



