தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

நாகா்கோவில் - நியூ ஜல்பைகுரி ரயிலை போத்தனூரில் நிறுத்த வலியுறுத்தல்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 11:57 pm IST

நாகா்கோவில் - நியூஜல்பைகுரி அம்ருத் பாரத் ரயிலை போத்தனூா் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என ரயில்வே பயணிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, போத்தனூா் ரயில் சந்திப்பு, போத்தனூா், குனியமுத்தூா், சுந்தராபுரம், மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

ஆந்திரம், ஒடிஸா, மேற்குவங்கம், பிகாா் மற்றும் வடகிழக்கு, வட இந்திய மாநிலங்களுக்கு, வணிகம், கல்வி மற்றும் குடும்பத் தேவைகளுக்காக அதிக அளவிலான பயணிகள் கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளில் இருந்து பயணம் செய்து வருகின்றனா். இதேபோல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழில், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளுக்கு ஏராளமானோா் வருகை தருகின்றனா்.

இதனால், நாகா்கோவிலில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் மேற்குவங்க மாநிலம், நியூஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் அம்ருத் பாரத் ரயிலை போத்தனூா் நிலையத்தில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நேரடி மற்றும் வசதியான பயண வாய்ப்பைப் பெறுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.