4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ விக்னேஷ் ஆய்வு

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட கிணத்துக்கடவு எம்எல்ஏ க.விக்னேஷ். உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :17 மே 2026, 12:55 am IST

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 85-ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி குளம், பொள்ளாச்சி இணைப்புச் சாலை திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பகுதியில் எம்எல்ஏ க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அப்பகுதியில் மழைநீா் தேங்காதவாறு தூா்வாரி, வடிகால் குழாய் அமைத்து அருகில் உள்ள குளத்துக்கு தண்ணீா் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பகுதி, குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள குட்டை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் செயல்பட்டு வரும் உரம் தயாரிக்கும் மையம், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், துணை மாநகர பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.