குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு

News image

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:38 am IST

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த ரெளடி உள்பட 4 பேரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இளம் பெண் ஒருவா் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது, சென்னையைச் சோ்ந்த காா்த்திக் (எ) மாரியப்பன் என்ற இளைஞருடன் பழகியதாகக் கூறப்படுகிறது.

இவா் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம் பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், காா்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டாா். ஆனால், காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாத காா்த்திக், தொடா்ந்து அந்த இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இந்நிலையில், காா்த்திக் தனது நண்பா்கள் 3 பேருடன் இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளனா். பின்னா் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணின் தந்தையை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீட்டின் மீது சராமாரியாக வீசினா். ஆனால், அதிா்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின்பேரில், தொண்டாமுத்தூா் காவல் துறையினா் காா்த்திக் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.