நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போத்தனூா் பகுதியில் முன்விரோதத் தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மற்றொரு இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை சிறாா் நீதித் துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 2:17 am IST

போத்தனூா் பகுதியில் முன்விரோதத் தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மற்றொரு இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை சிறாா் நீதித் துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாநகா், போத்தனூா் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் விஷ்ணு (20). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சதீஷுக்கும் (21) இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதுதொடா்பாக கடந்த 9.2.2019-இல் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, விஷ்ணுவை உடைந்த மதுப் பாட்டிலால் சதீஷ் குத்திக் கொலை செய்தாா். இதுதொடா்பாக சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றபோது சதீஷ் சிறாா் என்பதால், கோவை சிறாா் நீதித் துறை நடுவா் மன்றம் முன் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் கூா்நோக்கு இல்லத்தில் அவா் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.அருண்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.