அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோபி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் டெங்கு கொசு  ஒழிப்புப் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பணிகளை கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:56 am

DIN

கோபிசெட்டிபாளையம் பகுதியில் டெங்கு கொசு  ஒழிப்புப் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பணிகளை கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் சுகாதாரப் பணியாளர்கள், களப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் சுகாதார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில கோபி அருகே, கடுக்காம்பாளையத்தில் சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள், வீடுவீடாகச் சென்று தொட்டிகளில் உள்ள தண்ணீரைச் சோதனை செய்து, அவற்றில்  புழுக்கள் இருப்பின், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தெளித்தும், சாக்கடைகளில்  மருந்துகள் தெளித்தும், கிராமம்  முழுவதும் கொசுப் புகை அடித்தும், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பரிசோதனை செய்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிகளை கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம், டெங்கு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கி, வீடுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள பழைய டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். மேலும்,  அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் பொது மக்களும் ஈடுபட வேண்டும் என்றும் சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.