அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கைது

அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:11 am

DIN

அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் கன்னி,  4 நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் மான் வேட்டையாடும் சம்பவம் நடைபெறுவதாக சென்னம்பட்டி வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதையடுத்து,  அடர்ந்த வனப் பகுதியில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தபோது ஒரு கும்பல் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றது. அவர்களை சுற்றிவளைத்து வனத் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள்,  சேலம் மாவட்டம்,  மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (42),  வாசன் (49), செல்வன் (50), செந்தில்குமார் (44),  பாலு (46),  சண்முகராஜா (43),  பச்சியண்ணன் (26),  ரமேஷ் (18) என்பது தெரிந்தது. மேலும், அவர்களிடமிருந்து மான் வேட்டைக்கு வைக்கப்படும் இரும்புக் கன்னி,  4 நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவர்கள் மீது அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக வெள்ளிதிருப்பூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.