40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோபி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கோபி அருகே கொன்னமடை கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :24 ஜூலை 2018, 12:45 am IST

கோபி அருகே கொன்னமடை கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்குள்பட்ட கொன்னமடை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கூகலூர் பேரூராட்சி சார்பில் ஆற்றுநீர் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.  
ஆனால், இதில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது.  இதுகுறித்து   அப்பகுதி மக்கள்  பேரூராட்சி நிர்வாகம்,   மாவட்ட நிர்வாகம்,  அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த இக்கிராம மக்கள் 100- க்கும் மேற்பட்டோர் பெருந்தலையூர்-கூகலூர் இணைப்பு சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்ல வேண்டுகோள் விடுத்தனர்.  இதனால், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து,  அங்கு வந்த கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.  மேலும்,  கூகலூர் பேரூராட்சி அலுவலர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்து புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு இடம் தேர்வு  குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து சமாதானமடைந்த  பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.