தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மாவட்ட தடகளப் போட்டி:  சென்னிமலை கொங்கு பள்ளி முதலிடம்

மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில்  சென்னிமலை, கொங்கு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:46 am IST

மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில்  சென்னிமலை, கொங்கு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர். 
ஈரோடு மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், 17- ஆவது மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.  இப்போட்டியில், மாவட்டத்திலுள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த, 1,500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.  இதில், 16,18 வயதுகளுக்கான பிரிவில், சென்னிமலை கொங்கு பள்ளி மாணவர்கள் 15 பேர் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 6 தங்கம், 5 வெள்ளி,  4 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர்.  இப்போட்டியில், முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ்குமார், தட்சிணாமூர்த்தி ஆகியோரை பள்ளித் தலைவர் ஆர்.கந்தசாமி, தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளர் என்.டி.ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் அசோக் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.