மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில் சென்னிமலை, கொங்கு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஈரோடு மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், 17- ஆவது மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், மாவட்டத்திலுள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த, 1,500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16,18 வயதுகளுக்கான பிரிவில், சென்னிமலை கொங்கு பள்ளி மாணவர்கள் 15 பேர் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர். இப்போட்டியில், முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ்குமார், தட்சிணாமூர்த்தி ஆகியோரை பள்ளித் தலைவர் ஆர்.கந்தசாமி, தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளர் என்.டி.ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் அசோக் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடுகளுக்குள் புகுந்த கடல் நீா்: எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


