மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றனர்.
மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார்.
இந்நிலையில், இவரது வீட்டின் கதவு திங்கள்கிழமை காலை திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பரமசிவத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், டிவிடி பிளேயர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அடுத்தடுத்த இரு வீடுகளிலும் திருட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

அறிவியல் ஆயிரம்: மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? புதிய ஆய்வு சொல்லும் தகவல்!

ஓ சுகுமாரி படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

என் இனிய தமிழ் மக்களே! கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட விடியோ | CJP
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


