4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

200-க்கும் மேற்பட்டோருக்கு இலவச சமையல் எரிவாயு உருளை

மொடக்குறிச்சியை அடுத்த கனகபுரத்தில் இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 7:28 pm

மொடக்குறிச்சியை அடுத்த கனகபுரத்தில் இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கனகபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை சமையல் எரிவாயு உருளை பெறாதவர்களுக்கு அரசின் சார்பில் இன்டேன் எரிவாயு நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, எரிவாயு உருளை, அதற்குண்டான உபகரணங்கள் வழங்கும் விழா கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, கனகபுரம் அதிமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் ரங்கசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்துகொண்டு 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு உருளை, உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணபதி, அவல்பூந்துறை டெக்ஸ் முன்னாள் தலைவர் பூவைதமிழன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.