அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல்

பவானியை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 7:43 pm

பவானியை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை  நடைபெற்றது. 
இச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் 11 பேருக்கு, 33 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட தகராறால் ரத்து செய்யப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர் ஜான் டேவிட் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 
 இதில், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எஸ்.கவிதா, எம்.கவிதா, எஸ்.லட்சுமி, கே.அமுதவள்ளி, ஆர்.குமார், எஸ்.பரணீதரன், எஸ்.அர்ச்சுணன், பி.முத்துசாமி, கே.காந்தி, கே.பழனிசாமி, எம்.பெருமாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்வான எஸ்.பரணீதரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலராக உள்ளார். பவானி டிஎஸ்பி சார்லஸ் தலைமையில் ஆய்வாளர்கள் ரவி, குமரவேல், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.