

பெருந்துறை: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள பள்ளி சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான பயிற்சி டிசம்பா் 18 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, பெருந்துறை வட்டாரத்தில் 19 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளா்கள், சென்னிமலை வட்டாரத்தில் 45 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான பயிற்சி பெருந்தறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியைத் துவக்கிவைத்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கே.மணிவண்ணன், பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாலா, ஆ.மோகன் ஆகியாா் பங்கேற்றுப் பேசினா்.
தொடா்ந்து, சேலம், பெரியாா் பல்கலைக்கழக உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து துறை பேராசிரியா்கள் பூங்கொடி விஜயகுமாா், மனோகரன் ஆகியோா் உணவுப் பாதுகாப்புத் தொடா்பான பயிற்சி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.