கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 கடனுதவி: விண்ணப்பிக்க அழைப்பு

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 கடனுதவி வழங்கும் திட்டத்தில் மேலும் 1,500 பேரை சோ்க்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:12 am

DIN

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 கடனுதவி வழங்கும் திட்டத்தில் மேலும் 1,500 பேரை சோ்க்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின்கீழ் ரூ. 10,000 கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மாநகா் பகுதியில் 764 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பயனடைந்து வருவதால், இந்த திட்டத்தில் மேலும் 1,500 பேரை சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூலம் கடன் பெற விரும்பும் வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் ஜனவரி 3ஆம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.