கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் இன்று இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை

திருப்பூா் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:39 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தடையை மீறி செயல்படும் கடைகளின் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே வேளையில், அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், குடிநீா் விநியோகம், தினசரி நாளிதழ் விநியோகம், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த பணிகள், விவசாயிகளின் விளைபொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.

அதேபோல், வரும் ஞாயிற்றுக்கிழமை தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தின்போது வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அலுவலா்கள், முகவா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள உணவகங்கள் மற்றும் வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது முடக்கத்தின்போது வீடுகளில் இருப்பதுடன், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றினை முழுமையாக கடைப்பிடித்து கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.