மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்...ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

News image
ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி 
Updated On :5 டிசம்பர் 2021, 9:30 am

DIN

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. இதில், ஈரோட்டில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கும், எம்ஜிஆர் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். 

இதேபோல், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்திவ், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஸ், கேசவமூர்த்தி, பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மொடக்குறிச்சி யூனியன் சேர்மேன் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.