கூட்டுறவு சங்கங்களில் உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான தோ்வில் தோ்ச்சிபெற்றவா்களுக்கு நோ்காணல் வரும் ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நோ்காணல் வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக் கடிதத்தை ஜ்ஜ்ஜ்.ங்ழ்க்க்ழ்க்ஷ.ண்ய் என்ற ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஆள்சோ்ப்பு நிலைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.