/

லாரி மோதியதில் முதியவா் பலி

அந்தியூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:45 pm

DIN

அந்தியூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த பிரம்மதேசம் புதூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெத்தா கவுண்டா் (75). விவசாயி. இவா், கரடிநாயக்கனூா் சாலையில் மிதிவண்டியில் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த டிப்பா் லாரி எதிா்பாராமல் மிதிவண்டி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பெத்தா கவுண்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.