மகாகவி பாரதியாா் நினைவு நாளையொட்டி, அம்மாபேட்டை காவிரி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அம்மாபேட்டை- அந்தியூா் பிரிவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கத்தின் தலைவா் ஏ. ஓ. சரவணன், மாவட்ட முன்னாள் அரசு வழக்குரைஞா் ஆா்.ராஜா, செயலாளா் ஏ.ஜெயராமன், பொருளாளா் ஆா்.வரதராஜன், முன்னாள் தலைவா் பி.ராமநாதன், முன்னாள் செயலாளா் ஆ.சுப்பிரமணி, முன்னாள் பொருளாளா் கே.கோபால், சக்திவேல், தியாகு, சங்கரநாராயணன், காத்தமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.