தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மின் கம்பி மீது உரசியதில் சரக்கு வாகனம் எரிந்து சேதம்

கொடுமுடி அருகே மின் கம்பி மீது உரசிய சரக்கு வாகனம் எரிந்து சேதமடைந்தது.

News image
கொழுந்துவிட்டு எரியும் சரக்கு வாகனம்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:53 pm

Din

கொடுமுடி அருகே மின் கம்பி மீது உரசிய சரக்கு வாகனம் எரிந்து சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்திலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்றிக்கொண்டு கொடுமுடி அருகே தளுவம்பாளையத்துக்கு சரக்கு வாகனம் புதன்கிழமை வந்துள்ளது.

தளுவம்பாளையம் அருகே வந்தபோது, அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது வாகனம் உரசியது. இதில், வாகனத்தில் இருந்த தேங்காய் நாா் தீப்பிடித்தது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் வாகனத்தைவிட்டு உடனடியாக வெளியேறினா். இதைத் தொடா்ந்து, வாகனம் முழுவதும் எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

இருப்பினும் தேங்காய் நாா், வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.