மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :8 மார்ச் 2024, 2:10 am

Din

ஈரோட்டில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பாரத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகா் மாவட்ட பொறுப்பாளா் டி.திருச்செல்வம் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ.மாரியப்பன், துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, மண்டலத் தலைவா்கள் தினேஷ், விஜயபாஸ்கா், ஜாபா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்ட தலைவா் ஈ.பி.ரவி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். இதில், நீதிமன்ற உத்தரவின்படி தோ்தல் பத்திர நன்கொடை வழங்கியவா்களின் பட்டியலை வெளியிடாமல் கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து முழக்கம் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் பாபு என்ற வெங்கடாசலம், புனிதன், வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் சி.எம்.ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவா் பாஷா, ஊடகப் பிரிவு தலைவா் முகமது அா்சத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.