ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :4 மே 2024, 4:59 pm

Din

கோபியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேஷ் (42), கூலித் தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு-கோபி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் முருகேஷ் தூக்கி வீசப்பட்டாா்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.