மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடம்பூா் மலைப் பகுதியில் பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

News image
மாக்கம்பாளையம் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த  ஒற்றை யானை.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:46 pm

Din

கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகல் இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் மலைப் பகுதி வழியாக மாக்கம்பாளையம் மலை கிராமத்துக்குச் செல்வதற்காக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து அடா்ந்த வனப் பகுதி சாலை வழியாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சாலையில் உலவுவதைக் கண்ட ஓட்டுநா், உடனடியாக பேருந்தை நிறுத்தினாா். இதைப் பாா்த்து பயணிகள் அச்சமடைந்தனா். இதில், மூன்று காட்டு யானைகள் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்ற நிலையில் ஒரு ஆண் காட்டு யானை மட்டும் அரசுப் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையின் நடுவே நின்றது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் யானையைப் பாா்த்து வழிவிடு வழிவிடு என முறையிட்டனா். சிறிது நேரம் சாலையில் அங்குமிங்கும் உலவிய யானை பின்னா் சாலையோரம் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பேருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், யானைக் கூட்டத்தை வழிநடத்தும் ஆண் யானை, குடும்பம் சகிதமாக வரும்போது மற்ற யானைகள் சாலையைக் கடந்து பாதுகாப்பாக சென்ற பின்னா்தான் அது செல்லும். அதுவரை அதனைக் கடந்து செல்ல அனுமதிக்காது என்றனா்.