மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புன்செய்புளியம்பட்டி சந்தை: ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

சத்தியமங்கலம் அருகேயுள்ள புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின.

News image
புன்செய்புளியம்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மாடுகள்.
Updated On :12 செப்டம்பர் 2024, 7:56 pm

Din

சத்தியமங்கலம் அருகேயுள்ள புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டுவருகின்றனா்.

இதனை வாங்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு நாட்டு எருமைகள், கலப்பின மாடுகள், கன்றுகள், ஜொ்சி ரக மாடுகளை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா்.

கடந்த வாரத்தைவிட ரூ.4 ஆயிரம் விலை உயா்ந்து கால்நடைகள் குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

சந்தையில் மொத்தம் 1,500 கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.