மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னிமலை கோயில் மலைப் பாதையில் சீரமைப்பு பணிகள்: வாகனங்களுக்கு தடை

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல புதன்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:37 pm

Din

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல புதன்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறையை அடுத்த சென்னிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இதில், சாலை விரிவாக்கம், மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் படிக்கட்டு பாதை வழியாக மட்டுமே கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கோயில் நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.